திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. திருப்பதியில் கார் திருடியது அம்பலம்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் போலி பதிவன் கொண்ட டாடா சுமோ காரில் வந்ததாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ந்ததில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் தமிழக முழுவதும் வாகன சோதனை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

அதேபோன்று தமிழக ஆந்திர எல்லையில் விடிய விடிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் திருப்பதியில் கார் திருடிய சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருப்பதியில் கார் திருடப்பட்டது தொடர்பாக முத்தியால்ரெட்டி பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஹரியானவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அவர்கள் பிடிக்க 2 எஸ்பிக்கள் தலைமையிலான தனி படையினர் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai ATM robbery case car theft in tirupati


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->