தமிழக மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை!
Tamil Nadu 12 fishermen released
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி விசைப்படகுகளுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து 12 மீனவர்களையும் கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஒரு சில நாட்களில் புதுக்கோட்டை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu 12 fishermen released