பாரத வங்கியின் மேலாளர் தற்கொலை..!! 28 வயதான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோயில், பார்வதிபுரத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியில் ஆர். சந்திரன் (வயது 28) என்பவர் வங்கி மேலாளராகப் பணி புரிந்து வந்தார்.

இவர், திருவனந்தபுரம் வெள்ளம்பலத்தைச் சேர்ந்தவர். நாகர்கோயிலில் பணி புரிந்து வந்ததால், அங்கு, தேவசகாயம் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், தங்கி இருந்தார்.

சந்திரன் சுறுசுறுப்பான இளைஞர். தினசரி காலை 9 மணிக்கெல்லாம், வங்கிக்கு வந்து விடுவார். பின் வேலை முடிந்து, இரவு வரை வங்கி வேலைகளைப் பார்ப்பாராம். சமீபத்தில், தன் சகோதரருக்கு நடைபெற்ற திருணமத்தில் கூட, மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, திரும்பினாராம்.

ஆனால், நேற்று, சந்திரன் வங்கிக்கு வரவில்லை. எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், வங்கி ஊழியர்கள், சந்திரனின் மொபைல் போனுக்கு, ஃபோன் செய்தனர்.

ரிங் போய்க் கொண்டிருந்ததே ஒழிய, ஃபோன் எடுக்கப்படவில்லை. இதனால், வங்கி ஊழியர் ஒருவர், சந்திரனின் வீடு தேடி வந்து, கதவைத் தட்டினார். திறக்கவில்லை.

பின், அந்த ஊழியர், கதவைத் தள்ளினார். கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். உள் அறையில், மின் விசிறியில், சந்திரன் துாக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

 உடன், அவர் வடசேரி போலீசுக்கு தகவல் சொன்னார். அவரகள் வந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று முன் தினம், வங்கியில், உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, சந்திரனிடம், வங்கி டார்கெட்டை முடிக்கவில்லை, என்று அதிகாரிகள், கடிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது.

இதனால், மன உளைச்சல் அடைந்த சந்திரன் தற்கொலை செய்து கொண்டார், என்று சொல்லப் படுகிறது. இருந்தாலும், வேறு கோணத்திலும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

State Bank Of India Manager suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->