குடிவெறியில் மிருமாய் மாறிய காமக்கொடூர மருமகன், துடிதுடித்து போன மாமியார்.! வெளியான அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் புங்கம்பாடி பகுதியில் வசித்து வருபவர்  வெங்கிடுசாமி. இவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு சென்ராயன், மாரிமுத்து என்ற மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர் . மேலும் தனலட்சுமிக்கு, முத்தையா என்பவருடன் திருமணமாகி கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ராமுத்தாயின் கணவர் வெங்கிடுசாமியும் அவரது மகன் மாரிமுத்து இருவரும் சமீபத்தில் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.அதனால் ராமுத்தாய் தனது மகள் தனலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கலைச்செல்வி வேலைக்கு சென்றபோது, அவர்களது வீட்டிற்கு குடிபோதையில் வந்த முத்தையா, தனது மாமியார் ராமுத்தாயிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால்  ராமுத்தாய் தன்னிடம் பணம் இல்லை என கூறி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

                   

இதனால் கடுப்பான முத்தையா தனது மாமியாராக ராமுத்தாயை  கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான் .

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  ராமுத்தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் முத்தையாவை கண்டுபிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son in law rapped and killed mother in law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->