இன்று (3.12.2018) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
இன்று (3.12.2018) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
கடந்த 15 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் பல இலட்ச மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
இந்த புயலால் பாதித்த மக்கள் அனைவரும் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், தன்னார்வலர்களும் முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (3.12.2018) விடுமுறை என ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்தார்.
English Summary
SOME SCHOOL LEAVE IN NAKAI