போன் வாங்கி தராத தந்தை..! மோசமான ஒரு முடிவை எடுத்த மகள்..!! கண்ணீரில் மூழ்கிய இரு மாவட்டங்கள்..!!! மாணவிகளே இது நியாயமா..?!
போன் வாங்கி தராத தந்தை..! மோசமான ஒரு முடிவை எடுத்த மகள்..!! கண்ணீரில் மூழ்கிய இரண்டு மாவட்டங்கள்..!!! மாணவிகளே இது நியாயமா..?!
கடந்த 10 வருடங்களுக்கு முன் கையில் கிடைக்காத ஒரு ஆடம்பர பொருளை இருந்த செல்போன்கள், இன்று 05 வயது முதல் 95 வயது வரை ஆட்டி படைத்து வருகின்றது. அதும், இந்த தலைமுறை குழந்தைகள் பிறக்கும் பொது அம்மா னு சொல்லாம ஹலோ என்று சொல்லும் அளவுக்கு செல்போனின் அடிமைகளாக நாம் மாறியுள்ளோம்.
இந்நிலையில், செல்போன் வாங்கி தரவில்லை என ஒரு கலோரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தர்மபுரியில் நடந்தேறியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம் வேட்டுவபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும், தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதி அருகே தீர்த்தமலை பால குட்டை தோட்டம் என்ற ஊரை சேர்ந்தவர் அய்யாத்துரை.
இவரின் மகள் அகிலா [வயது 22] கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக தன தந்தையிடம் அகிலா, ''என் கல்லூரி மாணவிகள் அனைவரும் 'ஸ்மார்ட் செல்போன்' வைத்துள்ளனர். எனக்கும் வாங்கி தருமாறு கேட்டுவந்துளளர்.
இதற்கு, அகிலாவின் தந்தை அய்யாதுரை தற்போது பண கஷ்டத்தில் இருக்கிறேன். பின்னர் வாங்கி தருகிறேன் என கூறி வந்துள்ளார். இதனால், மனம் உடைந்த அகிலா, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம், அந்த மாவட்ட மக்களை மட்டும் அல்லாமல், அகிலாவின் சொந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
SMART PHONE KILLED A COLLEGE GIRL