தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்ததால் மாணவி பரிதாப மரணம்!. அதிர்ச்சி சம்பவம்!.
தூக்கத்தில் நடக்கும் வியாதியினால், 15 வயது மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரம்யாஎன்பவர் அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரம்யா தனது அக்கா வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். தனது திருமணமான மூத்த சகோதரியுடன் வசித்து வந்த ரம்யாவுக்கு, தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி திடீரென்று ரம்யா காணாமல் போய்விட்டதாக, அவரது சகோதரியும், உறவினர்களும் தேடியுள்ளனர். ஆனால், ரம்யா கிடைக்கவில்லை. ரம்யாவை வலைவீசி தேடினர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என ரம்யாவின் சகோதரி மற்றும் உறவினர்கள் முடிவெடுத்தனர். அப்போது வயல்வெளி நிலங்களுக்கு அருகேயுள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக உள்ளூர் மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பொழுதுதான் அது ரம்யாவின் சடலம் என தெரியவந்தது. அதிர்ந்த்துபோன ரம்யாவின் குடும்பத்தினர் பெரும் அலறல் சத்தம் போட்டனர்.அதனைத் தொடர்ந்து, ரம்யாவின் உடல் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ரம்யாவிற்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்ததால், தூக்கத்தில் இரவு நடந்துசென்று கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
English Summary
Sleep disease, 15 year old student dies