பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.! தாளாளர் கைது.! மாணவியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்து போன நீதிபதி..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் உள்ள மெத்தடிஸ் எனும் தனியார் பள்ளியில் தாளாளராக இருப்பவர் குணஜோதி மணி. இவர் அந்த பகுதியின் திருச்சபையில் பாதிரியராகவும் உள்ளார்.

அந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் 9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் தாய் பத்மாவதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, கடந்த 16-ந்தேதி பாதிரியார் குணஜோதி மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த பாதிரியார் குணஜோதி மணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் தரமறுத்து, அவரை ஜூன் 26 ந்தேதி {நேற்று} வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து. இந்நிலையில், திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் திடீர் என பாதிரியார் குணஜோதி மணி சரணடைந்தார். அவரை ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து பாதிரியார் குணஜோதி மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த பள்ளி மாணவி கொடுத்த வாக்குமூலத்தை கேட்டு நீதிபதி அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், ''பாதிரியார் குணஜோதிமணி அந்த மாணவி போலவே அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடமும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக'' கூறி இருப்பதாக தெரிகிறது. 

இதனால், இந்த வழக்கு பற்றி முழு அளவில் விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் போலீசார், குணஜோதி மணியை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexually abused school girl church father arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->