பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி..! 14 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..!! சென்னையை பதற வைத்த சம்பவம்..!!! - Seithipunal
Seithipunal


திருவள்ளுரைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றதும், அந்த நபர் அந்த மாணவியை வெளியே அழைத்துச் செல்வார்.

பின் அவருக்கு, கஞ்சா மது போன்றவற்றை கொடுத்து பழக்கி வந்துள்ளார். இதை மாணவிக்கு கொடுத்து விட்டு, மாணவியை பலாத்காரம் செய்வாராம். பின்னர், அந்த மாணவியை, வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு விடுவாராம்.

கடந்த 5-ஆம் தேதி, வீட்டை விட்டுச் சென்ற மாணவி, இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால், மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். பின் போலீசார் நான்கு நாட்களாகத் தேடி அந்த மாணவியைக் கண்டு பிடித்தனர்.

அந்த மாணவி சொன்னதைக் கேட்டு, பெற்றோரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவியை வழக்கமாக அழைத்துச் செல்லும் அந்த நபர், பள்ளி மாணவிக்கு மிக அதிகமான போதை வஸ்துக்களைக் கொடுத்து, தனியாக ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

பின், அந்த நபரின் நண்பர்கள் உட்பட 14 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் புகார் அடிப்படையில், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்த கார்த்திக், அருண்குமார், ராஜேஷ், மகேஷ், ராஜ்கமல், உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

    மீதமுள்ள 8 பேரை, போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl sexually abused near by chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->