ஐந்து பெண்களுக்கு தாலி கட்டிய காதல் மன்னன்..! சேலத்தை கதிகலங்க வைத்த சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அஞ்சல் இடங்கணசாலை கிராமத்தை அடுத்த புதுரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு வயது 40. தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே 4 முறை திருமணம் நடந்து உள்ளது. எந்த மனைவியுடனும் வாழாத இவர் தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் பூபதி, சங்ககிரி பகுதியை சேர்ந்த தங்கவேலு மகள் கிருஷ்ணவேணி [38] திருமணம் செய்து கொள்வதாக கூறி கேட்டுள்ளார். கிருஷ்ணவேணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்கு முன்பு கணவரும், மகனும் இறந்து விட்டனர். இதனால் கிருஷ்ணவேணி திருமணம் செய்து கொள்ள சம்மதித்து, கடந்த கடந்த மே மாதம் பூபதிக்கும், கிருஷ்ணவேணிக்கும் திருமணம் நடந்தது.

திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு பூபதி, கிருஷ்ணவேணியிடம் இருந்து 10½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை விவசாயம் செய்ய வேண்டும் என கேட்டு வாங்கி கொண்டார். பூபதியின் நடவடிக்கையில் கிருஷ்ணவேணிக்கு சந்தேகம் வரவே, அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் பூபதி குறித்து கிருஷ்ணவேணி விசாரித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணவேணி, இது சம்மந்தமாக தனது கணவர் பூபதி மற்றும் மாமனார் கோவிந்தசாமி, மாமியார் சிங்காரி ஆகியோரிடம் ஏற்கனவே 4 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து என்னை ஏமாற்றி ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டு உள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

இதனையடுத்து, கிருஷ்ணவேணியை, 3 பேரும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து, கொலை மிரட்டல் செய்து சித்தரவதை செய்தனர். இந்நிலையில், பூபதி இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பித்த கிருஷ்ணவேணி, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த பூபதியின் தந்தை கோவிந்தசாமி, தாய் சிங்காரி  தலைமறைவாகிவிட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் பூபதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

05 பெண்களை திருமணம் செய்த இந்த ஆசாமியை பற்றி செல்வது மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem man marred 5 womens


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->