தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை - பரபரப்பை ஏற்படுத்திய மோடியின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வருகிறார். அந்த வகையில், நேற்று கோயம்புத்தூருக்கு வருகை தந்த அவர், வாகன பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்: அதில், "1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். 

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi tweet about dmk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->