தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்: பொன்னேரி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் திருவள்ளூர், பொன்னேரி பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை செய்தனர்.

வேலை முடிந்த நிலையில் 4 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். 

அப்போது தொழிலாளர்கள் 2 பேர் நடைமேடையை விட்டு இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தொழிலாளர்கள் மீது மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த தொழிலாளர்கள் 2 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponneri train hit killed 2 people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->