கனமழையால் சரிந்த மேற்கூரை! 50க்கும் மேற்பட்டோர் கதி என்ன? சென்னையில் பெரும் பரபரப்பு!
petrol bunk roof collapse accident due to heavy rains in Chennai
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 6:00 மணி முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்குரையானது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனமழையின் காரணமாக மழைக்கு பெட்ரோல் பங்க்கின் மேற்கூறையின் கீழ் ஒதுங்கி இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி இருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியோடு மேற்கூறையை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினரும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் கொட்டும் மழையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
petrol bunk roof collapse accident due to heavy rains in Chennai