#திருப்பூர் || மாணவிகளை கழிவறையை கழுவ வைத்த கொடூரம்! பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலையரசி. 

இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசுவது, கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளி மாணவர்களை குடிநீர் குடிக்க விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வட்டார கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

ஆனால் இந்த செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை கலையரசியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் புகார் மனு அழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents complained against headmistress who ask students clean toilet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->