மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், போலீஸ் ஸ்டேசன் முன்பாக தீக்குளித்த பெற்றோர்..!!
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், போலீஸ் ஸ்டேசன் முன்பாக தீக்குளித்த பெற்றோர்..!!
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சேர்ந்தவர்கள், ஏழுமலை சசிகலா தம்பதியினர். இவர்களது மகளின் பெயர் கல்பனா (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி.
இவர்கள் வசித்து வரும் வீட்டின் எதிர் வீட்டில், விராலிபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 24) என்ற வாலிபர் தங்கி இருந்தார். இவர் அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இவர்கள் இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காதலுக்கு கல்பனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, காதலர்கள் இருவரும், வீட்டிற்குத் தெரியாமல், மாயமானார்கள். மகளைக் காணாததால், ஏழுமலை வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கடந்த 26-ஆம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி, செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரது பெற்றோர்களுக்கும், போலீசார் தகவல் அனுப்பினர். அந்தக் காவல் நிலையத்திற்கு வந்த கல்பனாவின் பெற்றோர், மகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்து, வெளியேறி வந்தனர்.
பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் வாங்கி வந்து, காவல் நிலையம் முன்பாக தங்கள் மேல், பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்றி வைத்தனர். இருவரின் உடலும் தீப் பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்காரர்கள், இருவரையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். போலீசார் தொடர்ந்து காதல் திருமணம் செய்தவர்களை, வேட்டவலம் போலீசில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
English Summary
PARENTS ATTEMPT TO SUICIDE