#திருபத்தூர் || பள்ளி வாகனத்தில் சிக்கிய ஒன்றை வயது குழந்தை பலி.!!
One year old child dies after getting stuck in school bus in Tirupattur
திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்மனபுதூரில் தனது மூன்று வயது சகோதரனை அழைத்துச் செல்வதற்காக வந்த பள்ளி வேனில் சகோதரன் ஏறிய நிலையில் ஒன்றை வயது குழந்தை பள்ளி வேனை நோக்கி ஓடி வந்துள்ளது.
அப்போது குழந்தையை பார்க்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கிய நிலையில் பின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி வாகன ஓட்டுனர் முனியப்பன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் முனியப்பனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
One year old child dies after getting stuck in school bus in Tirupattur