கார் டிரைவர் சற்று கண் அயர்ந்ததால் ஏற்பட்ட கோரவிபத்து!. ஒருவர் பலி 6 பேர் படுகாயம்!.
கார்விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி 74 வயது நிரம்பிய இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள உறவினர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக செஞ்சியில் உள்ள தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு வாடகை காரில் மணமேல்குடி நோக்கி வந்துள்ளார்.
நேற்று அதிகாலை புதுக்கோட்டை சிப்காட் அருகே கார் வந்தபோது டிரைவர் சற்று கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மீனாட்சி படு காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர்.
மேலும் கார் டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்துஅந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட அந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காகவும், இறந்த மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
old women died in car accident and 6 people injured