குழந்தை கடத்தல் வழக்கில் நர்ஸ் அமுதா கைது..!!!போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானது 

அந்த ஆடியோவில் நர்ஸ் அமுதா குழந்தை இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு எடுத்து தர்றேன்(குழந்தையை வாங்கித்தருகிறேன்). இதற்காகவே நான் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன் 30 வருஷமா இப்படி தான் செய்துட்டு வர்றேன். இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. அப்பா- அம்மாவை பார்த்துதான் குழந்தையை எடுப்பேன்.  குழந்தை எடுக்கும்போது அவங்ககிட்ட கையெழுத்து வாங்கிப்பேன்.  அதெல்லாம் முறைப்படி செய்து கொடுத்துவிடுவேன்.  வெளியில கோர்ட் மூலமாக போனா லேட்டாகும் என ஆடியோ வாட்ஸ்-அப்பில் பேசிய ஆடியோ வெளியானது இதனையடுத்து நாமக்கல் ஆட்சியர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவுயிட்டார் 

 இன்று காலை அமுதாவை கைது செய்த போலீஸ் அவரை சென்னை அழைத்து சென்று  தீவிர விசராணை நடத்தினர்  இதுவரை 3 குழந்தைகளை விற்றதாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும், குழந்தை விற்பனை தரகருமான அமுதா வாக்குமூலம் அளித்தார் 

அந்த 3 குழந்தைகளையும் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி, மேட்டூர் மற்றும் ஓமலூரில் விற்றதாக அமுதா வாக்குமூலம் அளித்தார் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NURSE AMUTHA ARREST BY POLICE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->