முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.6 கோடி வழங்கிய பிரபல நிறுவனம்! - Seithipunal
Seithipunal


கஜா புயல் காரணமாக  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்துளளது. கஜா புயலுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.  

இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை. அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்கள் புகார் எழுப்புகின்றனர்.  இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே,  நிவாரண நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கும் வழங்கலாம் என அரசு அறிவித்தது. 

இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளுக்காக என்எல்சி நிறுவனம் மற்றும் பணியாளர்களின் சார்பில் ரூ.6.79 கோடி நிவாரண நிதி முதல்வரிடம் காசோலையாக, என்எல்சி தலைவர் ராகேஷ் குமார் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC relief fund in cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->