சேலம் அருகே அரசுவேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி பணமோசடி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அரவிந்த் குமார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று அளித்தார். 

அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "என் தந்தை மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். அவர் மூலம், அன்னதானப் பட்டியை சேர்ந்த அரிசி வியாபாரி நடராஜன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று சசிகுமார் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் கடந்த 2015- 2016ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 83 லட்சத்தை சசிகுமாரிடம் வழங்கினேன். ஆனால் அவர் யாருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார்.

அதன் பின்னர் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, சசிகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தியதில், போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகுமார் மனைவி உள்பட அவரது கூட்டாளிகள் என்று மொத்தம் 6 பேர் ரூ.2 கோடியே 83 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் ஆறு பேர் மீதும் கூட்டு சதி மற்றும் மோசடி உள்பட மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையே போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமார் சென்னையில் ஒரு மருத்துவரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் நிலையிலேயே அவரை அரசு வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். 

இதுமட்டுமல்லாமல், இந்த மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இந்த வழக்கில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் அரிசி வியாபாரியான நடராஜனை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, போலீசார் அவரிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் போலீசார் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem three peoples arrested for money fraud


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->