குரங்கு அதன் குட்டிக்கு செய்த செயலால்! கண்கலங்கிய மக்கள்!! - Seithipunal
Seithipunal


திருச்சி முக்கோம்பில் இறந்த குட்டியுடன் சுற்றித்தெரியும் குரங்கு, அதற்கு பாலூட்ட முயற்சிக்கும் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பிரசத்திப் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக முக்கொம்பு உள்ளது. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. அப்போது, அங்கு குரங்கு ஒன்று குட்டியுடன் சுற்றித்திரிந்தது. அதனை உன்னிப்பாக பார்த்த பொதுமக்கள், குட்டி எந்தவித அசைவும் இன்றி இருப்பதை கவனித்துள்ளனர். 

இதனையடுத்து அருகிலிருந்த வியாபாரிகளிடம் விசாரித்த போது தான் சுற்றுலா பயணிகளுக்கு உண்மை தெரிந்தது. அந்த குட்டி சில தினங்களுகு்கு முன்பே இறந்து போயுள்ளது. ஆனால், தாய் குரங்கோ குட்டியை பிரிய மனமின்றி, உயிரோடு இருப்பதாகவே பாவித்து அதற்கு பாலூட்டியுள்ளது. 

மேலும், அதற்கு பேன் பார்ப்பதும் அருகில் யாராவது வந்தால் அவர்களை விரட்டுவதுமாகவே இருந்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் கண்ணீர் சிந்த செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MONKEY EYES ARA CATCHING PEOPLE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->