கவுந்தபாடி || அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - புகாரில் சிக்கிய ஜோதிடர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அன்பானந்தன். பிரபலமான ஜோதிடரான இவரிடம் ஈரோடு மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஜோதிடம் பார்ப்பதற்காக பலர் வருகின்றனர். அப்படி வந்தவர்களில் ஈஸ்வரி- சண்முகசுந்தரம் தம்பதியினர் நாளடைவில் குடும்ப நண்பர்களாக பழகியுள்ளனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அன்பானந்தன், சண்முகத்திரத்தின் மகனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதனை உடனே நம்பிய சண்முக சுந்தரம் அன்பானந்தத்திடம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். 

அதன் பிறகு அன்பானந்தன், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகசுந்தரம் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார், விசாரணை நடத்தியதில் அன்பானந்தன் ஏற்கனவே இரண்டு பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி தலா 5 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அன்பானந்தன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அன்பானந்தனின் மனைவி கோகிலாம்பாளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money fraud in erode kavunthapadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->