கோவை மாணவி உயிரழப்பு! மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
கோவை மாணவி உயிரழப்பு! மாணவியின் குடும்பத்திற்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
நேற்று கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின் போது மாணவி ஒருவர், 3-வது மாடியிலிருந்து 2-வது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்தில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி, முதலில் தொண்டாமுத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தத்தவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு 05 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
lokeshwari dead tn govt new action