தலைமுடிக்காக... தலையை வெட்டிய பெண்! அதுக்குன்னு இப்படியா?!  - Seithipunal
Seithipunal


வீட்டு கழிவு நீர் தன் வீட்டுக்கு வந்த காரணத்திற்காக, பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கூடலூர் எனும் கிராமத்தில், வசித்து வருபவர் பிரியா. பிரயாவிற்கும் பக்கத்துக்கு வீட்டு பெண் நாகரத்தினம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இதனிடையே, பிரியாவின் வீட்டு கழிவு நீரானது, நாகரத்தினம் வீடு வரை வந்ததால், இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரியாவை பழிவாங்க எண்ணிய நாகரத்தினம், பிரியாவின் தலைமுடி பறந்து வருவதை காரணமாக கூறி, இனி தலைமுடி என் வீட்டிற்கு வந்தால், தலையை வெட்டிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.

இதனால் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. ஒருகட்டத்தில் நாகரத்தினம், கத்தியை எடுத்து பிரியாவின் தலையில் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பிரியா, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமுடி பறந்து வந்ததால், பெண்ணின் தலையை வெட்டிய சம்பவம் அந்த பகுதி பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LADY ATTACK FOR CHILLY REASON


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->