பெண்ணை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் கொடூர கொலை செய்த மர்ம கும்பல்.! தடுக்க வந்த 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!!
in thiruthani girl killed by thief gang and also killed her son police investigation going on
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை சார்ந்தவர் வனப்பெருமாள் (வயது 50). இவர் அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் வீரலட்சுமி (வயது 45). இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர்கள் இருவருக்கும் பவித்ரா என்ற 25 வயதுடைய மகளும்., போதிராஜா என்ற 10 வயதுடைய மகனும் உள்ளனர். பவித்ராவுக்கு திருமணம் முடிந்த நிலையில்., அவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களின் மகனான போதிராஜா 5 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
வனப்பெருமாள் நேற்று முன் தினத்தில் இரவு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்., இல்லத்தில் வரலட்சுமி மற்றும் போதிராஜா ஆகியோர் இருந்துள்ளனர். மீண்டும் காலையில் தனது பணியை முடித்துவிட்டு இல்லத்திற்கு வனப்பெருமாள் திரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில் வீட்டிற்கு உள்ளே வந்து பார்த்த போது வரலட்சுமி இரத்த வெள்ளத்தில் இறந்தும்., மகன் போதிராஜா இறந்தும் கிடந்துள்ளார். இதனை கண்டு கதறியழுத வனப்பெருமாளின் கதறலை கேட்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்தனர்.
இல்லத்தில் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்த தகவலை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தினர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம கும்பலை தடுக்க முயன்ற வீரலட்சுமியை அரிவாளால் வெட்டியும்., தாயாரின் அலறலை கேட்டு வந்த சிறுவனை அயன் செய்யும் இயந்திரத்தின் வயர் மூலமாக கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இவர்களை கொலை செய்த கும்பல்., பின்னர் பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையை செய்த குமபலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in thiruthani girl killed by thief gang and also killed her son police investigation going on