பொள்ளாச்சி வழக்கு தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.!! பறக்கப்போகும் சம்மன்., சிக்கப்போகும் பல தலைகள்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜ்., வசந்தகுமார்., பாபு., செந்தில் ஆகியோர் ஏற்கனவே கைதாகி., பார் நாகராஜ் ஜாமினில் வெளியான நிலையில்., மீதமுள்ள அனைவரும் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் கடந்த 25 ம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்., 8 ம் தேதி வரை மணிவண்ணனை சிறையில் அடைப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த நேரத்தில் மணிவண்ணன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யவே., அந்த ஜாமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் சுமார் 11 நாட்கள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி கேட்டனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சுமார் நான்கு நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர். 

அந்த விசாரணையில்., திருநாவுக்கரசருக்கும் - பார் நகராஜிற்கும் இடையேயான தொடர்பு குறித்தும்., இந்த கும்பலுடன் மணிவண்ணனிற்கு இடையேயான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணையை நடத்தியுள்ளனர். இந்த விஷயத்தில் மேலும் பல நண்பர்களின் விபரத்தை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரின் தீவிர விசாரணையில் தேவையான முக்கிய தகவல்களில் பெருமபாலானவை கிடைத்துவிட்டதால்., மணிவண்ணனை இன்றே நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டு., இது தொடர்பான  விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் பலருக்கு நாளை முதல் சம்மன் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi sexual harassment case CBCID investigation sampan to manivannan friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->