ஒரே தொட்டியில் ஊறும் ஒட்டு மொத்த உடல்கள், அழுகிய பின் வெளிநாட்டிக்கு ஏற்றுமதி..!! அனாதை இல்லம் என்று நம்பி சென்றால், அங்கு நடப்பது..?
செங்கல்பட்டு அருகே இறந்த பெண் ஒருவரையும், இரண்டு முதியவர்களையும் ஆம்புலன்ஸ் மூலமாக கடத்தியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் அனாதை இல்லம் ஒன்று உள்ளது,,இங்கு ஆதரவற்ற முதியவர்கள், வயது முதிர்வு காரணாமாக இறப்பதால் இறப்போரை பெரிய தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்
அழுகிய உடலில் மீதம் இருக்கும் எலும்புகளில் இருந்து மருந்து தயாரிப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று தாம்பரத்திலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் 2 முதியவர்களும், உயிரிழந்த பெண் ஒருவரின் சடலும் கடத்தப்படுவதாக வண்டிக்குள் இருந்த பெண் கூச்சலிட்டார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார்.
பல வருடங்களாகவே அந்த அனாதை இல்லத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகளை ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்வதாக அப்பகுதி மக்கள் பலமுறை குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது
English Summary
illegal use of old people dead bodies in orphanage