திருவெண்காடு அருகே கரை ஒதுங்கிய ராட்சத பொருள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் படி அங்கு விரைந்து வந்த போலீசார், மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அந்தப் பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அடையாளப்படுத்துவதற்காக மிதக்க விடும் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்தப் பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என பூம்புகார் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரைக்கும் கண்டிராத வித்தியாசமான உருவம் கொண்ட அந்த பொருளை அப்பகுதி பொதுமக்களும், பூம்புகாருக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளும் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதனால் தற்காலிக சுற்றுலா மையமாக கீழமூவர்கரை கிராமம் மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Giant object in near thiruvenkadu sea


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->