தூத்துக்குடியில்., ஒருதலை காதல் தோல்வி.! தம்பியும் - அண்ணனும் விஷமருந்தி தற்கொலை.!! விரக்தியில் தந்தையும் பலியான சோகம்.!!
FATHER AND 2 SONS DIED IN THOOTHUKUDI
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தன்குளத்தை அடுத்துள்ள தட்டார்மடம் மணிநகர் அருகிலுள்ள புதூரை சார்ந்தவர் கோவில்மணி (வயது 60)., இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவியின் பெயர் குணசீலி. இவர்கள இருவருக்கும் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் 2 மகன்களுக்கும்., 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில்., கடைக்குட்டி மகனான விஜய்க்கு திருமணம் ஆகவில்லை.
கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய்., அந்த அப்பகுதியில் பழக்கமான பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்., இவரின் காதல் தோல்வியில் முடிந்ததால்., விரக்தியடைந்த அவர் மீண்டும் புதூருக்கே வந்துள்ளார்.
கடந்த 20 தேதியன்று புதூரில் உள்ள மதுபான கடையில் மதுவை வாங்கிய விஜய் வாழ மனதில்லாமல்., மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். அதே போன்று விஜய்யின் சகோதரர் ராஜா., குடும்ப பிரச்சனையால் தவித்து வந்த நிலையில் தம்பி அருந்திய மதுவை சாதாரண மது என்று நினைத்து அருந்தியுள்ளார்.
இருவரும் விஷத்தின் வீரியம் தாங்காமல் துடிதுடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்., அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி 20 ம் தேதியே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய் 22 தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில்., தனது இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோவில்மணி பணிக்கு சென்ற போது., காய்ச்சலால் அவதியுற்றுள்ளார்.
அவரை மீட்ட சக நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றவுடன்., அவரது இல்லத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் அவரை அவசர ஊதியின் மூலமாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடிக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக கோவில் மணி உயிரிழந்தார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
FATHER AND 2 SONS DIED IN THOOTHUKUDI