நிர்மலாதேவி விவகாரத்தில் மாயமான வீடியோ ஆதாரங்கள்….! அதிர்ச்சி தகவல்….!
evidances of nirmaldevi case
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 மாத காலமாக, பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு கடந்த 2-ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டினார், என்று அவரது வக்கீல்கள் கூறி உள்ளனர்.
மேலும், “ இந்த விவகாரத்தில், அரசியல் மட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் சிக்கி உள்ளனர். அவர்களைக் காப்பாற்றவே, இந்த வழக்கில், நிர்மலாதேவியை மிரட்டி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலம் வாங்கி உள்ளனர்.
இந்த விவகாரத்தில் சிக்கியவர்களின் பெயர்களை வெளியிட்டால், நிர்மலாதேவியைக் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளனர். அதனால், சிறையில் அவருக்கு பாதுகாப்பு இல்லை.
நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக அரசு ஏன் மௌம் சாதிக்கிறது? நிர்மலாதேவியின் உடல் நலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிர்மலாதேவி சிலரிடம் வழங்கிய போட்டோ மற்றும் வீடியோ ஆதாராங்களை, சி்.பி.சி.ஐ.டி. போலீசார், அவரை மிரட்டி எடுத்துச் சென்று விட்டதாக, நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிட்டால், அது தமிழகத்தில் மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும். பலருடைய முகத்திரை கிழிபடும்.
அந்த ஆதாரங்களை, சமயம் வரும் போது வெளியிடுவோம், என்று நிர்மலாதேவியின் வக்கீல்கள் பசும்பொன் பாண்டியன் மற்றும் கமலக் கண்ணன் கூறி உள்ளனர்.
சென்ற முறை, நிர்மலாதேவி கோர்ட்டிற்குச் சென்ற போது, அங்கு குழுமி இருந்த செய்தியாளர்களிடம் பேசுவதற்காகச் சென்றார். ஆனால், அவரது வாயைப் பொத்தி போலீசார் அழைத்துச் சென்றனர், என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
evidances of nirmaldevi case