சீருடையில் காதலன் வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி - கதவை தட்டி அதிர்ச்சி கொடுத்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளொற்றி மாணவி ஒருவருர் பக்கத்துக் கிராமத்தைச் வாலிபர் ஒருவரும் காதலித்து வருகிறார்கள். வாலிபரின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கல்லூரி மாணவி கல்லூரி சீருடையில் அடிக்கடி காதலன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பல நாட்களாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல தன் காதலன் வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி வீட்டுக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு இருவரும் தனிமையில் இருந்தனர். 

இதை பார்த்த கிரம மக்கள் சிலர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை தட்டினர். அப்போது, காதலனும் கல்லூரி மாணவியும் கதவை திறந்து பார்த்தபோது, வெளியே போலீசார் நிற்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் மாணவியை தனியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது கல்லூரி மாணவி தாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம், 'கல்லூரி சீருடையில் இவ்வாறு ஒரு வீட்டுக்கு தனிமையில் வந்து செல்வது தவறு. இனிமேல் இப்படி வரக்கூடாது' என எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college students come boy friend house with wear uniform in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->