சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை..! கடையின் ஊழியரே திருடியது அம்பலமானது..!!!
சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை..! கடையின் ஊழியரே திருடியது அம்பலமானது..!!!
சென்னையில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை சென்னை தியாகராயநகர் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையில், கடையில் பணிபுரியும் ஊழியர்களே 1 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளைத் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.
தியாகராஜ நகர், ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான ஜே.ஜே.டைமன்ட்ஸ் கடையில் கடந்த மாத நகை இருப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்தது. அப்போது 1 கிலோ 300 கிராம் எடையுள்ள நகைகள் குறைவதை உரிமையாளர் கண்டுபிடித்தார்.
இதையடுத்து தனது கடையில் பணிபுரியும் ஊழியர்களை விசாரித்தார். இறுதியாக அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்மல் கதோடு, நிதிஷ் கதோடு ஆகிய இரு நபர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பாண்டிபஜார் காவல்நிலையத்தில், காவல்துறை விசாரித்து வந்தது.
இந்நிலையில் காவல்துறை அந்த இரண்டு பேரையும் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 11 நெக்லஸ்கள், 9 கம்மல்கள் உள்பட ஒரு சங்கிலி திருடியதாக அந்த கடையின் ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து காவல்துறை அந்த நகைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
English Summary
Chennai Jewelry Robbery Above 1 KG Gold