குடிமகன்களே உஷார்..! மது பாட்டிலில் மிதந்த உயிரினம்..!! அரியலூரில் அதிர்ச்சி..!!! - Seithipunal
Seithipunal


அரியலூர் அருகே மதுபாட்டிலில் நத்தை ஓடு கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி..!!!

அரியலூரில் மாவட்டம், கள்ளங்குறிச்சி டூ அரியலூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை ஒன்றில், அரியலூரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியிருக்கிறார். பின் அதை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் குடிக்க ஓர் இடத்தில் அமர்ந்து குடிக்க ஆரமிக்கும் பொது, அருகில் இருந்த நம்மவர் ஒருவர், அய்யப்பனை மது பாட்டிலை திறக்காதே... உள்ள ஏதோ மிதக்கிறது. என தடுத்துள்ளார்.

அந்த மது பாட்டிலை திறக்காமல், உற்றுப் பார்த்த போது அந்த மதுபாட்டில் உள்ளே ஒரு நத்தை செத்துக் கிடந்ததைக் கண்ட அய்யப்பன் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அந்த நத்தை செத்துக் கிடந்த சரக்குப் பாட்டிலை, திறக்காமல் அப்படியே அரசு மதுபான கடை ஊழியர்களிடம் காண்பித்திருக்கிறார். 

அதற்க்கு அந்த ஊழியர்கள் மது பாட்டில்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் கோபமடைந்த குடிமகன்கள், ''மது பாட்டில்கள் உற்பத்தி செய்கிற இடத்திலிருந்தே நத்தை வந்ததா?, இல்லை, நீங்கள் எதுவும் டூப்ளிக்கெட் சரக்கு விற்பனை செய்கிறீர்களா..? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் அங்கு மது குடிக்க வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் இந்த மது பாட்டிலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ''குடிமகன்களே உஷார்'' என பதிவிட்டு வருகின்றனர். மது குடிக்காமல் இருப்பதே நல்லது, மது குடிப்பதினால் எந்த வெளியிலாவது உங்கள் உயிர் பிரிவது உறுதி என்பதே நிதர்சனம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

be alert liquor Battle inside some thing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->