மதுவருந்தும் கணவனால் வாழ்வதே வீண்.! 3 குழந்தைகளுக்கும் விஷம் வழங்கி தாயும் தற்கொலை முயற்சி.!!
a lady and her child attempt suicide in karur
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையை அடுத்துள்ள பட்டவர்த்தியை சார்ந்தவர் வீரபாண்டி. இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கார்த்திகா (28).
இவர்கள் இருவருக்கும் தனிஷ்கா., தனுஷ்கா மற்றும் துர்கா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்., சம்பவத்தன்று நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் இல்லம் திறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி அவர்களை எழுப்ப முயற்சித்தனர்.
வீட்டின் உள்ளே இருந்த இவர்களின் நிலை குறித்து எந்த விதமான சத்தமும் இல்லாததால் ஜன்னலின் வழியாக இவர்களை பார்த்துள்ளார். அப்போது கார்த்திகா மற்றும் அவரின் குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து அவர்களை மெட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சமப்வம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்துவிட்டு., பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., மதுஅருந்தும் பழக்கம் உள்ள வீரபாண்டி வேலைக்கு சென்றுவிட்டு பணம் வழங்காமல் மது அறுத்தியுள்ளார். இதன் காரணமாக இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும்., சம்பவத்தன்று வழக்கம்போல மது அருந்திவிட்ட நிலையில் வீட்டிற்கு வந்த வீரபாண்டி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்த கார்த்திகா தனக்கும் தனது மகள்களுக்கும் விஷம் வழங்கியது தெரியவந்தது. நல்ல வேலையாக இவர்கள் அனைவரையும் தக்க சமயத்தில் கண்டு கொண்ட அக்கம் பக்கத்தினரால் அவர்களின் உயிரானது காப்பாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
a lady and her child attempt suicide in karur