திருவண்ணாமலையில்., 90 நாட்கள் ஆன மகனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிய கொடூர தந்தை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அருகேயுள்ள காம்பட்டு கிராமத்தை சார்ந்தவர் கார்த்திகேயன் (30)., இவர் அங்குள்ள பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

இவருக்கும் அதே பகுதியை சார்ந்த இராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று., தற்போது 3 மாதமான ஆண் குழந்தை உள்ளது. 

நேற்று இரவு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் இல்லத்திற்கு கார்த்திகேயன் வந்துள்ளார். அந்த சமயத்தில் கார்த்திகேயனின் தந்தை தனபால்., அவரது மனைவி இராஜேஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தனர். 

அப்போது உறங்கிக்கொண்டிருந்த இராஜேஸ்வரிக்கு அரிவாள் மூலமாக யாரோ எதையோ வெட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது., இதனை உணர்ந்து திடுக்கிட்டு விழித்த அவர் அறையின் விளக்குகளை ஒளிரச்செய்த போது., கார்த்திகேயன் அவரது சொந்த மகனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டிக்கொண்டு இருப்பதை கண்டு அலறினார்.

இவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கார்த்திகேயனின் தந்தை தனபால் பதறியபடி அறைக்குள் சென்று பார்த்த போது குழந்தையின் உடலானது துண்டு துண்டாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும்., அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a baby killed by her dad in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->