சிவகாசி : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பொட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த, இருளாயி (48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் பட்டாசு தயாரித்துக் அறையில் திடீரென வெப்பம் காரணமாக மருந்து உராய்வு ஏற்பட்டு திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது.

இதில் 2 அறைகள் தரைமட்டமான நிலையில், குமரேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமுறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in firecracker factory blast in Sivakasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->