அடக்கினால் ரூ.1 லட்சம்.. சவால் விட்ட காளை உரிமையாளர்.. தட்டி தூக்கிய 20 வயது இளைஞர்! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று நாட்களாக மதுரை மாவட்டம் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன அதே போன்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 

அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலையூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் காளையை அடக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மாட்டின் உரிமையாளர் ஒருவர் அறிவித்தார். 

அந்த காளையை அடக்க பலர் துடித்துக் காத்திருந்த நிலையில் வெறும் 20 வயதே ஆன மோகன் என்ற இளைஞர் அந்த மாட்டை அடக்கி ஒரு லட்சம் ரூபாய் பரிசினை தட்டிச் சென்றார். மாட்டின் உரிமையாளர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கோட்டை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் கேகே செல்ல பாண்டியன் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20yeas old boy awarded rs1lakh in Pudukkottai jallikattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->