பொங்கல் பரிசு வாங்க ரேசன் கடை நெரிசலில் சிக்கி ,இரண்டு பெண்கள் பரிதாப சாவு...!
2 ladied died in the ration shops
தற்போது, ரேசனில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை, மும்முரமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் இந்தப் பொருட்களையும், பணத்தையும் வாங்குவதற்காக, அதிகாலை முதலே, வரிசையில் காத்திருக்கின்றனர். அதிலும், பெண்களின் கூட்டம் தான் மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள கீழப்பெருமாள்புரத்தில் உள்ள ரேசன் கடையில், கூட்ட நெரிசலில் சிக்கி, பிரமாத்தி (வயது 80) என்ற வயதான பெண், பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதே போல், மதுராந்தகம் அருகே உள்ள ஒரு ரேசன் கடையிலும், நெரிசலில் சிக்கி, ஒரு பெண் உயிர் இழந்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
English Summary
2 ladied died in the ration shops