தஷ்வந்த்க்கு தண்டனை உறுதி செய்த அதே நாளில்.. சிவகங்கையில் வாய்பேசமுடியாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!! இன்னும் என்ன தண்டனை கொடுக்க.?!
தஷ்வந்த்க்கு தண்டனை உறுதி செய்த அதே நாளில்.. சிவகங்கையில் வாய்பேசமுடியாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!! இன்னும் என்ன தண்டனை கொடுக்க.?!
17 வயது வாய்பேசமுடியாத சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (10.07.2018) காலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அச்சரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலையில் மகள் (17) வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின் அந்த மர்ம நபர்கள், அந்த சிறுமி உயிருடன் இருந்தால் தங்களை அடையாளம் காட்டி விடுவார் என்ற பயத்தில் கொலை செய்து, வீட்டின் பின்புறம் உள்ள ஒரு புதரில், அந்த சிறுமியின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த சிறுமியின் பெற்றோர்கள் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றதால், அந்த வழியாக ஆடுமேய்க்க வந்த பெண் ஒருவர், ஒரு புதரில் வாய்பேசமுடியாத அந்த சிறுமி இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளை, 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
17 years old girl sexually abused and killed