இந்திய கிரிக்கெட் அணியில் ஊக்கமருந்து பயன்பாடு.. உண்மையை போட்டுடைத்த தேர்வுக்குழு தலைவர்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் ரசிகர்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் ஷர்மா பதவி வைத்து வருகிறார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களை வென்றதில்லை.

இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மொத்த தேர்வு குழுவும் கலைக்கப்படுவதாக பிசிசி அறிவித்தது.

இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிய நிலையில், பழைய தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் உள்ள வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் போது ஊக்க மருந்துகளை எடுத்துக்கொண்டு விளையாடுகின்றனர்.

மேலும், அவர்கள் 80 முதல் 85 சதவீதம் உடல் தகுதியோடு இருந்தாலும் ஊக்க மருந்துகளை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவர்கள் எந்த வகையான ஊக்க மருந்துகளை பயன்படுத்துகிறார்கள் என தெரியவில்லை மேலும் அவை ஊக்கு மருந்து சோதனையில் கூட கண்டுபிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணிகள் தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களுடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team use doping Chetan Sharma


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->