இன்றைய (21.03.19) ராசிபலன்: பங்குனி உத்திரம் , இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? - Seithipunal
Seithipunal


மேஷம்:

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால்  நட்பு வட்டம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும். 

ரிஷபம்:

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:

வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். 

கடகம்:

சுற்றுலா செல்வதற்கான செயல்திட்டத்தை தீட்டுவீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள்.

சிம்மம்:

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

கன்னி:

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவு  பெருகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பணியில் எடுத்தச் செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

துலாம்:

ஞானத்தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுடன்  இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும்.

விருச்சகம்:

இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும்.

தனுசு:

மாணவர்கள் பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். மனதில் எண்ணிய செயல் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும்.

மகரம்:

பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும்  மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும்.

கும்பம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். 

மீனம்:

அலைச்சல்களால் வியாபாரத்தில்  சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.  பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

march 21 rasi palan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->