இன்றைய (21.03.19) ராசிபலன்: பங்குனி உத்திரம் , இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி?
march 21 rasi palan
மேஷம்:
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும்.
ரிஷபம்:
மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள்.
கடகம்:
சுற்றுலா செல்வதற்கான செயல்திட்டத்தை தீட்டுவீர்கள். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள்.
சிம்மம்:
பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.
கன்னி:
புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவு பெருகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பணியில் எடுத்தச் செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
துலாம்:
ஞானத்தேடல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும்.
விருச்சகம்:
இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும்.
தனுசு:
மாணவர்கள் பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். மனதில் எண்ணிய செயல் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும்.
மகரம்:
பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும்.
கும்பம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
மீனம்:
அலைச்சல்களால் வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்கநிலை உண்டாகும்.