பொள்ளாச்சி சம்பவத்திற்கு தனது கண்டனங்களை தெரிவித்த தமிழிசை!!
tamilisai says about pollachi issue
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், "பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,
பெண்ணினம் கசக்கப்படுவதையும்.. நசுக்கப்படுவதையும்..துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும, சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும்" என கூறியுள்ளார்.
English Summary
tamilisai says about pollachi issue