இரட்டை இலை வழக்கில் வெளியானது தீர்ப்பு! கோட்டைவிட்ட தினகரன்! சாதித்த ஓபிஎஸ், இபிஎஸ்!
two leaves symbol case verdict
ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பான தினகரன், சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கபட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வர இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இரட்டை இலையை தினகரன் கைப்பற்றுவாரா? அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் தக்கவைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் க்கு இரட்டை இலையை வழங்கியது சரி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன், சசிகலா தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
two leaves symbol case verdict