குக்கர் இல்லே, வேறு எந்த சின்னத்திலேயும் நாங்க ஜெயிப்போம்…! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்…! டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி….!
T.T.V. Dinakaran's statement about the elction
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருக்கத்தில் அமமுக. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்தார். அப்போது, தினகரனைச் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அவர்களிடம் தினகரன் பேசுகையில், “ குக்கர் சின்னம் பற்றிய தீர்ப்பு நாங்கள் ஏற்கனவே, எதிர்பார்த்தது தான். இந்த சின்னம் குறித்த நீதி மன்ற உத்தரவால் எங்களுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. சம்மட்டி அடியும் கிடையாது.
உள்ளதைச் சொல்லப் போனால், உச்ச நீதி மன்றம் சரியான தீர்ப்பைத் தான் அளித்துள்ளது. உச்ச நீதி மன்ற உத்தரவை மீற யாரும், சின்னம் தர முடியாது. சின்னத்தை பரிசீலிக்கச் சொல்லவில்லை. கொடுக்கத் தான் சொன்னார்கள்.
நான்கு வாரத்தில் கொடுக்க முடியவில்லை என்றால், அவர்கள் கேட்கக் கூடிய சின்னத்தைக் கொடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.
எங்களுக்கு சின்னம் ஒரு பிரச்சினையே இல்லை. அதற்கு, ஆர்.கே. நகர். இடைத் தேர்தல் வெற்றி தான் சிறந்த உதாரணம். மக்களுக்கு விழிப்புணர்வு தான் வேண்டும். எங்களது இயக்கத்தைப் பற்றிய நல்ல புரிந்துணர்வு தமிழக மக்களுக்கு உள்ளது.
எங்களை தேர்தலில் சந்திக்கப் பயந்து தான், ஆளும் கட்சியினர், வரப் போகும் இடைத் தேர்தலை தள்ளிப் போடச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் எங்களுக்குள்ள செல்வாக்கிற்கு இதுவே நிதர்சனமான ஆதாரம். இதை விட வேறென்ன வேண்டும்.
குக்கர் சின்னம் இல்லை, வேறு எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும், நாங்கள் வெற்றி பெறுவோம். அது உறுதி. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கு விசாரணை முடிந்தால் தெரியும், என்றார்.
English Summary
T.T.V. Dinakaran's statement about the elction