ஒன்று போதும் என்றேன்... ஆனால் பாஜக தான்.! உண்மையை உடைத்த டிடிவி தினகரன்.!
TTV Dhinakaran speech
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னையில் இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கேற்ப வார்த்தை முடிவு பெற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், ஒரு தொகுதி போதும் என தெரிவித்தேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் ஆவது போட்டியிடுங்கள் என பா.ஜ.க தெரிவித்தது என்று தெரிவித்துள்ளார்.