திருநெல்வேலி | 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.!
Tirunelveli Ban flying drones for 2 days
திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் மையதானத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளார்.
இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், விடுதிகள், ரயில் நிலையங்கள், வாகன தணிக்கை போன்ற இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே போல் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுநாள் அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் சுற்றி உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Tirunelveli Ban flying drones for 2 days