39 தொகுதிகளில் களமிறங்கிய தேமுதிகவினர் - பிரேமலதாவின் அதிரடி மூவ்.!!
Premalatha appointed incharges for 39 constituency
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையே மார்ச் 6ம் தேதி 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் 4 மக்களவை தொகுதிகள் மட்டுமே ஒதுக்க ஒப்புக்கொண்டதாகவும், மாநிலங்களவை தொகுதி ஒதுக்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால் அதிமுக தேமுதிக கூட்டணி இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 39 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Premalatha appointed incharges for 39 constituency