நண்பர்களுடன் சென்ற என்ஜினீயரிங் மாணவர்... ஏரியில் பிணமாக மிதந்த உடல்! பின்னணியில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மீஞ்சூர் அடுத்துள்ள கல்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றிருந்தார். 

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கரன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். பின்னர் நண்பர்கள் கரணை தேடியும் அவர் கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில் இன்று காலை கரண் உடல் ஏரியில் பிணமாக மிதந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering student dies after drowning lake


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->