கேரள மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் - பினராயி விஜயன் உறுதி.!
Pinarayi Vijayan says Kerala People not believe
கேரளாவில் உள்ள 20 தொகுதி தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகின்ற 26 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் பிரனாய் விஜயன் பாஜக மற்றும் காங்கிரசை குற்றம் சாட்டி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார்.
இதனை யாராவது நம்புவார்களா வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம். ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது.
மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு, நாட்டில் ஆர் எஸ் எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சி ஏ ஏ குறித்து தெரிவித்துள்ளது. அந்நாள் காங்கிரஸ் மீண்டும் மௌனம் காத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
Pinarayi Vijayan says Kerala People not believe