மனவேதனையுடன் தனது கண்டனத்தை பதிவு செய்த ஓபிஎஸ்!
ops tweet about new zealand attack
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை என்பதால், அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம். மேலும், அங்கு நடந்த சம்பவம் ஒரு இனவெறி தாக்குதல் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் அகமது ஜஹாங்கீர், அல் நூர் மசூதிக்கு அருகே ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவில் வசிக்கும் அவரது சகோதரருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தமிழக துணை முதலைச்சர் ஓ.பன்னிச்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. இப்பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
English Summary
ops tweet about new zealand attack